New Update
/indian-express-tamil/media/media_files/JwO5d8eXUcnRGF7bi98b.jpg)
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்ப இருந்த போது வழியில் ஆதி கைலாஷிலிருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அவர்கள் அங்கேயே ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்தான விவரம் தெரிந்தபின் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரகாண்ட்டில் சிக்கித் தவித்த தமிழர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தங்களை பத்திரமாக மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழக அரசு உத்ரகாண்ட் அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் 30 பேரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட அனைவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.