Advertisment

உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இனி 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்': சட்டப் பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
samina

தமிழக சட்டப் பேரவையின் 2-ம் நாள் கூட்டம் இன்று (டிச.10) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழக அரசு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Advertisement

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment