/indian-express-tamil/media/media_files/sOv7V2rXvpmCCIsP5J37.jpg)
மூத்த அரசியல் தலைவரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்காக வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம், வீட்டில் வழுக்கி விழுந்ததில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.