கமல் கருத்தில் தவறில்லை: கோவையில் வைகோ பேச்சு

"வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி. கமல் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது." என்று கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.

"வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி. கமல் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது." என்று கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Vaiko support Kamal Haasan Kannada language row Coimbatore press meet Tamil News

"வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி. கமல் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது." என்று கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

Advertisment

வருகிற ஜூன் 22 ஆம் ஈரோட்டில் ம.தி.மு.க பொதுக்குழு நடத்த அறிவிகப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக்குழுவில் எடுத்து வைக்க இருக்கிறோம். 

பெஙகளூரில் 11 பேர் உயிரிழந்த்து மிகவும் வேதனைக்குரியது. முன்கூட்டியே விபரீத மரணங்கள் நிகழகூடும் என உளவு துறை யூகித்து ஏற்பாடு  செய்து இருக்கta வேண்டும். மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு வீரவணக்கம். ம.தி.மு.க சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

உலகில் இருக்கும் மொழியில் வல்லுநர்கள், அறிஞர்கள் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். வட மொழி, கிரேக்கம், லத்தின் , எகிப்து மொழி போன்றவற்றை விட  மிக தொன்மையான மொழி தமிழ் மொழி. இதனால்தான் நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார். மலையாளம், கன்னடம் தமிழில் இருந்து உதித்தது என பாடி இருக்கின்றார். தி.மு.க கூட்டங்களில் இந்த கருத்துதான் பாடலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடமொழியை  விட மூத்த மொழி தமிழ்மொழி. கமல் இந்த கருத்தை  பேசியதில் எந்த தவறும் இல்லை. இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது. 

Advertisment
Advertisements

முருகன் மாநட்டில் மதத்தை வைத்து அரசியல்  நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழகத்தில் ஒலித்த மொழி  உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது  நல்லதிருப்பம். அ.தி.மு.க ஆட்சியில்  ஏராளமான தவறுகள் நடந்தது. மக்கள் பாதிக்கபட்டபோது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. எதிர்வரிசையில் இருப்பதால்,  கற்பனையோடு பேசுகின்றார் எடப்பாடி. அதை  பொருட்படுத்த வேண்டிய  அவசியமில்லை 

ம.தி.மு.க சார்ரபில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் இன்னும் பதிந்து  இருக்கின்றது. தி.மு.க மாநிலங்களவை பொறுப்பை கொடுத்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ம.தி.மு.க -  தி.மு.க-விற்கு வருங்காலங்களில் என்றும் துணை நிற்கும். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. த.வெ.க பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. 

இவ்வாறு ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். 

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore Vaiko Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: