/indian-express-tamil/media/media_files/cm8dGcitEHFQWHJWYpwq.jpg)
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நம்பவர் மாதத்தில் உடல் நிலை மோசமடைந்ததால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள்த்தில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். ” எரிமலைஎப்படிப்பொறுக்கும்என்றஎன்பாடலுக்குஉயிர்கொடுத்தகதாநாயகன்உயிரிழந்துபோனார்திரையில்நல்லவர் ; அரசியலில்வல்லவர்சினிமாவிலும்அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர்கலைவாழ்வுபொதுவாழ்வுகொடைமூன்றிலும்பாசாங்குஇல்லாதவர்கலைஞர்ஜெயலலிதாஎனஇருபெரும்ஆளுமைகள்அரசியல்செய்தகாலத்திலேயேஅரசியலில்குதித்தவர்எதிர்க்கட்சித்தலைவர்என்றஉயரம்தொட்டவர்உள்ளொன்றுவைத்துப்புறமொன்றுபேசாதவரைநில்லென்றுசொல்லிநிறுத்திவிட்டதுகாலம்வருந்துகிறேன்கண்ணீர்விடும்குடும்பத்தார்க்கும்கதறிஅழும்கட்சித்தொண்டர்களுக்கும்என்ஆழ்ந்தஇரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிடுட்ள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.