நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடங்கிய நிலையில் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
சீமானின் பழைய டுவிட்டர் கணக்கை முடக்கியதை எதிர்த்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
"வன்மையாகக் கண்டிக்கிறேன்
சுட்டுரையை முடக்கிவிட்டால்
சீமான் தீர்ந்து போவாரா?
வெயிலுக்கு எதிராகக்
குடைபிடித்தால்
காணாமற் போகுமோ கதிரவன்?
கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;
கை கால்களைக் கட்டாதீர்கள்
கருத்துரிமை இன்னும்
உயிரோடு இருப்பதாக
நம்புகிறவர்களுள்
நானும் ஒருவன்", என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil