Advertisment

சீமானுக்கு போலீஸ் சம்மன்: விஜயலட்சுமி வழக்கில் செவ்வாய்க் கிழமை ஆஜர் ஆகிறார்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் செவ்வாய்க் கிழமை ஆஜர் ஆகிறார்.

author-image
WebDesk
New Update
Seaman says If say Christians and Muslims are minorities I will beat by slipper, Naam Tamilar Katchi, கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன், -சீமான் ஆவேசம், Seaman, Christians and Muslims are minorities

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்.9) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில்  செவ்வாய்க் கிழமை ஆஜராவார் என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், புகார் தொடர்பாக இன்று (செப்.9) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் கூறியிருப்பதாவது, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராக மாட்டார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment