வால்பாறை இடைத்தேர்தல்: நடக்குமா? நடக்காதா? தேர்தல் ஆணையம் விளக்கம்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Valparai election

Valparai By election

கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி (60), வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஜூன் 21 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு, வால்பாறை தொகுதியை காலியாக்கி உள்ளது.

Advertisment

பொதுவாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) மறைந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. இந்த விதிமுறையின்படி, வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், வால்பாறைக்கு இடைத்தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்ற குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபை 2026, மே 9 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதை கருத்தில் கொண்டு, தற்போதைக்கு வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் இது போன்ற சூழல்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, கடந்த 2020 ஜூன் 10 ஆம் தேதி சேப்பாக்கம் எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன் இறந்த போதும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, வால்பாறை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: