'கல்வி நிதிக்கு கணக்கு காட்ட மறுக்கும் தமிழக அரசு'... வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மத்திய அரசு கல்விக்காக அளித்த நிதிக்கு தமிழக அரசு சரியான கணக்குகளைத் தரவில்லை என்றும், ஆனாலும் மத்திய அரசு வஞ்சிப்பதாகப் பொய் சொல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மத்திய அரசு கல்விக்காக அளித்த நிதிக்கு தமிழக அரசு சரியான கணக்குகளைத் தரவில்லை என்றும், ஆனாலும் மத்திய அரசு வஞ்சிப்பதாகப் பொய் சொல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

author-image
WebDesk
New Update
Vanathi Srinivasan

'கல்வி நிதிக்கு கணக்கு காட்ட மறுக்கும் தமிழக அரசு'... வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு கல்விக்காக தமிழக அரசுக்கு வழங்கிய கோடிக்கணக்கான நிதிக்கான ரசீதை கேட்டால், தமிழக அரசு கொடுப்பதில்லை. ஆனால், தமிழகத்தை வஞ்சிப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறது என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.

Advertisment

கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'மாணவர்களுக்கு கல்விக்கான நிதி கொடுக்கவில்லை; மாணவர்களை வஞ்சிக்கின்றனர்' என்று கூறியது குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

“இந்தக் குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வருகின்றன. இது பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசப்பட்டுள்ளது. மாநில அரசு எடுக்கும் முடிவுகளை மத்திய அரசு கேட்டால், அதற்கான சரியான பதிலை அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல் செய்வது சரியில்லை.”

ஆசிரியர் பற்றாக்குறை

“பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிக மிக அதிகமாக உள்ளது. நான் செல்லுகின்ற பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், 'ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியுமா' என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், இந்த அரசு தேர்தலில் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?'' என்று கேள்வி எழுப்பினார்.

'மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை' - பொய்

Advertisment
Advertisements

''இன்று நான்கரை ஆண்டுகளாகியும் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த கேள்விகள் எல்லாம் எழுப்பும்போது, 'மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை' என்ற ஒற்றை வார்த்தையில் சமாளிக்கிறார்கள். இது உண்மை அல்ல. மத்திய அரசு இதுவரை இல்லாத அளவிற்கு எத்தனையோ நிதிகளைக் கொடுத்துள்ளது. ஆனால், தமிழக அரசு அந்த நிதிகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்தியது என்பதற்கான ரசீதை (utilization certificate) கொடுக்கவில்லை.

பயன்படுத்திய நிதிக்கு ரசீது கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்ட நிதியை மத்திய அரசால் வழங்க முடியும். அதனால்தான், ரசீது கேட்டால், 'மத்திய அரசு வஞ்சிக்கிறது' என்று வழக்கமான பல்லவியைப் பாடுகிறார்கள். அவர் கூறியதில் எந்த உண்மையும் கிடையாது,'' என்று தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கேட்டால், 'நீதிமன்றம் தடை விதிக்கிறது' என்று தமிழக அரசு காரணம் கூறுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். “அவர்களுடைய சட்ட ஆலோசகர்களை வைத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கை தகுந்த முறையில் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆண்டுக்கணக்காக வழக்குகள் நிலுவையில் இருந்தால், அதை ஒரு அரசு காரணமாக கூற முடியுமா? அரசுக்கு 5 ஆண்டுகள் ஆட்சிக்காலம், அதற்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா என்று பார்க்க வேண்டும்.” சிவசேனா போராட்டம் குறித்த கேள்விக்கு, “அதை அவர்கள் செய்யட்டும். ஒரு நாட்டில் நடக்கக்கூடிய விஷயங்களை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறிச் சென்றார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை 

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: