பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
தமிழக அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளம் கரைப்குதியில் பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சிகளை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
வானதி சீனிவாசன்
இதில் பா.ஜ.க மாநில பார்வையாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளும் பங்கேற்றனர். யோகா நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisment
Advertisements
அப்போது பேசிய அவர்: பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்று இருக்கிறது எனவும்,உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது எனவும் தெரிவித்தார். மேலும் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகின்றது என தெரிவித்த அவர், உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் , பூங்காகளில் யோகா செய்வதற்கான தனி இடம் ஒதுக்க வேண்டும் எனவும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் எனவும், இது மத சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது எனவும் குறிப்பிட்டார். யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழிதவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும் எனவும் தினமும் 30 நிமிடம் யோகா கட்டாயமாக்க பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து அவர் பூரண குணமாக வேண்டும் எனவும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”