28 பைசா மோடி என்று அழைத்தால் ஜாபர் சாதிக் அறிமுகம் உள்ளதால் ட்ரக் உதயநிதி என்று அழைக்கலாமா? என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானி சீனிவாசன் கூறுகையில், ” கோவையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி, தேர்தல் ஆணையத்தின் கட்டுபாடுகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. பிரதமரின் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுக்க முடியும், மத்திய பா.ஜ.க அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திர பட்டியலில் அவர்கள் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளித்திருக்கும்.
தி.மு.க அரசு மக்களுக்கு எதிராக உள்ளது. செத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என தாங்க முடியாத சுமையை மக்கள் மீது தி.மு.க அரசு திணித்து வருகிறது. பிரதமரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28 பைசா என விமர்சனம் செய்வதா ? பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும். 28 பைசா மோடி என்று அழைத்தால் ஜாபர் சாதிக் அறிமுகம் உள்ளதால் ட்ரக் உதயநிதி என்று அழைக்கலாமா? ” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“