/indian-express-tamil/media/media_files/fATdjMOoTd9oOtEifFAv.jpg)
தொகுதி மறு வரையறை விவகாரத்தில் உள்ள கவலைகளை புரிந்துக்கொள்ள முடிகிறது என வானதி சீனிவாசன் கூறினார்.
vanathi-srinivasan | tamil-nadu-budget | தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.14,2024) இரண்டு தீர்மானங்கள் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், “இந்த இரண்டு தீர்மானங்களுக்கு நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுகின்றன” என்றார்.
தொடர்ந்து, இந்தத் தீர்மானங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, தொகுதி மறுவரை செய்வதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது. அதேசமயம், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்தது.
இந்தத் தீர்மானங்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யும் விவகாரத்தில் உள்ள அச்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மு. அபபாவு, “தீர்மானத்தை ஆதரிக்கிறீர்கள் அப்படிதானே? என்றார். அதற்கு அய்யாவுக்கு அந்த வார்த்தை வேணும் அப்படிதானே என்றார் கிண்டலாக. இதைக் கேட்டதும் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தேவையற்றது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.