/indian-express-tamil/media/media_files/5Trhm853kZusmr3l1CGi.jpg)
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
AIADMK-BJP alliance breakup: அதிமுக பாஜக முறிவு விவகாரத்தில் தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் வெளியிட மாட்டோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என கூறினார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார்.
தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள் அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.
அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.