Advertisment

விலங்குகளுக்கு அழுகிய உணவு கொடுப்பதாக குற்றசாட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு

தீவன மாதிரிகள் பொதுமக்களின் ஆய்வுக்கு தயாராக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் ஊடகவியலாளர்கள் தரத்தை சரிபார்க்கலாம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
vandalur zoo

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக, வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் விலங்குகளுக்கு அழுகிய உணவை வழங்குவதாக நிர்வகிக்கும் குழுவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

இருப்பினும், தீவன மாதிரிகள் பொதுமக்களின் ஆய்வுக்கு தயாராக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் ஊடகவியலாளர்கள் தரத்தை சரிபார்க்கலாம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“இங்கு விலங்குகளுக்கு வழங்கப்படும் பெரும்பாலான தீவனத்தில் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் உள்ளன, அவை அழுகியவை" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"அதிகமான கவனிப்பு தேவைப்படும் வயதான விலங்குகள், குறிப்பாக கோடை காலத்தில், மோசமான கவனிப்பு காரணமாக இறந்துவிட்டன", என்றனர்.

மற்றொரு தொழிலாளி, உள் போட்டியால் நிர்வாகம் திணறுவதாக குற்றம் சாட்டினார். “ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளி விலங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முயன்றாலும், அது அதிகாரிகளால் பாராட்டப்படுவதில்லை. நாங்கள் சோர்வாக உணர்கிறோம், ”என்று தொழிலாளி கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த விலங்கியல் பூங்காவின் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி, கந்து வட்டிக்காரர்கள் நிர்வாகத்தை இழிவுபடுத்த முயற்சிப்பதாக கூறினார். “இந்த குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை மற்றும் ஆதாரமற்றவை. இங்குள்ள விலங்குகள் ஆரோக்கியமாகவும், நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோடையில் விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

"விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய எங்களிடம் தனி குழு உள்ளது. உணவு தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால், நாங்கள் அதை திருப்பி அனுப்புகிறோம்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment