/indian-express-tamil/media/media_files/ixnBOSy88CUV4gqc9ybC.jpg)
ரஜினிகாந்தின் 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் அக்.4ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் அக்.4ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த நிலையில் படத்துக்கு வன்னியர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும், இதர சகோதர சமுதாயங்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை தான் செய்தது தவறு என நேரடியாக மன்னிப்பு கூட கேட்காதவர் த.செ.ஞானவேல்.
இத்தகைய போக்கை கொண்டிருக்கும், ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல், ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் மறைந்த தலைவர் ஜெ குரு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டன எனவும் த.செ. ஞானவேல் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஜினி 170வது படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us