Advertisment

வி.ஏ.ஓ வெட்டிக் கொலை; ரூ.1 கோடி நிவாரணம், அரசுப் பணி வழங்க ஸ்டாலின் உத்தரவு

தூத்துக்குடி அருகே அலுவலகத்துக்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ்ஸை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வி.ஏ.ஓ குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VAO hacked to death, வி.ஏ.ஓ வெட்டிக் கொலை, ரூ.1 கோடி நிவாரணம், அரசுப் பணி வழங்க ஸ்டாலின் உத்தரவு - VAO hacked to death in tuticorin, CM Stalin announces Rs 1 crore relief and government job to vao family

வி.ஏ.ஓ வெட்டிக் கொலை; ரூ.1 கோடி நிவாரணம், அரசுப் பணி வழங்க ஸ்டாலின் உத்தரவு

தூத்துக்குடி அருகே வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வி.ஏ.ஓ குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ) பணியாற்றியவர் லூர்துபிரான்சிஸ் (55). இவர் வி.ஏ.ஓ அலுவலகத்துக்குள் பணியில் இருந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லூர்து பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ராமசுப்பு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு புகுந்து வி.ஏ.ஓ-வை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்றும் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என உத்தரவிடுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் (55) த/பெ யேசுவடியான் என்பவரை இன்று மதியம் அவரது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இது குறித்து காவல் துறையின் மூலம் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.

லூர்து பிரான்சிஸ் கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும் கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment