Advertisment

சென்னையில் வி.சி.க – புரட்சி பாரதம் கட்சியினர் மோதல்; 7 பேர் காயம்

வி.சி.க மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல்; 3 பெண்கள் உள்பட 7 பேர் காயம்; சென்னையில் பரபரப்பு

author-image
WebDesk
New Update
thiruma-jagan

வி.சி.க மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை விருகம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் புரட்சி பாரதம் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisment

சென்னை விருகம்பாக்கத்தில், வி.சி.க நிர்வாகி ஆதவன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தப்போது புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புரட்சி பாரதம் கட்சியினர், ஆதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதலில் வி.சி.க தரப்பில் 3 பெண்களுக்கும், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி.சி.க – புரட்சி பாரதம் கட்சியினர் மோதலால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment