scorecardresearch

மின்சாரம் தாக்கி வி.சி.க தொண்டர் உயிரிழப்பு: திருமாவளவன் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 26வயது தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசிக தொண்டர் மரணம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த  26வயது தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, மங்களபுரத்தில் உள்ள பஜானி கோவில் தெருவில் வசித்து வருபவர் டில்லி பாபு. இவர் தனியர் நிறுவனத்தில் இந்தியரத்தை இயக்கும் வேலை செய்கிறார். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, பாபுவும், விசிக கட்சியை சேர்ந்த அவரது நண்பர்களும், பட்டரைவாக்கம் பொன்னியம்மன் கோவிலில் கிரிகெட் போட்டிகள் நடத்தினர்.

கிரிக்கெட் போட்டிகள், 9 மணிக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, பரிசு வழங்கும் விழா நடைபெற வேண்டிய பணிகளை செய்து கொண்டிருந்தார் பாபு. இந்நிலையில் மெட்டல் கம்பம் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கவனித்த பாபு. தொடர்ந்து அந்த மெட்டல் கம்பத்தை சரிசெய்ய ஆட்களை யாரும் கிடைக்காததால், அவரே அதை சரி செய்தார்.

இந்நிலையில் அதற்கு மேலே மின்சாரம் செல்லும் மின் இணைப்பு கேபிள் இருந்தது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி கிழே விழுந்தார். அவரை நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் மரணமடைந்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்ச ரூபாய் வழங்குவதாக அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck member dies in electric shock in chennai

Best of Express