Advertisment

திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு - வி.சி.க எம்.பி ரவிக்குமார்

திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravikumar

திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தேன். திருச்சியில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் பொது மேலாளரிடம் தனிப்பட்ட முறையிலும் இதை எடுத்துக் கூறினேன். அதன் விளைவாக எதிர்வரும் மே 2-ம் தேதி முதல் திருச்சி - விருத்தாசலம் பாசஞ்சரை விழுப்புரம் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் பகுதி மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாலை 6 மணிக்கு திருச்சியில் கிளம்பி இரவு 9 மணிக்கு விருத்தாசலம் வந்தடையும் இந்த பாசஞ்சர் ரயில் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர் ஸ்டேஷன்களில் நின்று இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். விடிகாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு அதே வழியில் காலை 9 மணிக்கு திருச்சிக்கு சென்று சேரும். என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment