/indian-express-tamil/media/media_files/mmgIGaXLiTNTIVZmhQDC.jpg)
சாலை மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனா்.
Tiruchirappalli | சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் மலையூா் கடைத் தெருவில் கடந்த 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் இளமதி மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் சேலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.
இதைத் தொடா்ந்து, போலீசார் வலியுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்த 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு உத்தமர் கோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.