Advertisment

வி.வி.பாட் சீட்களை 100% எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திருமா முக்கிய கோரிக்கை

மக்களவைத் தேர்தலில் வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணிய பிறகே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வி.சி.க சார்பில் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumavalavan Trichy
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் இன்று (மார்ச் 7) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சந்தித்தார்.

Advertisment

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முக்கியமான கோரிக்கையாக, விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். வி.விபாட் பாட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை தனி பெட்டியில் போட்டு, அதனையும் முழுமையாக எண்ண வேண்டும். தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோரிக்கையை மக்களின் சார்பில் வலியுறுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

இன்றும் வட இந்திய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. பழைய வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புள்ளது என்ற அச்சம், பொது மக்களால், கட்சி சார்பற்ற அமைப்பினரால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 2 கட்டமாக வி.சி.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் இன்றும் அதை வலியுறுத்தி  தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment