மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேத நிலைய இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிபதி மணிக்குமார் தலைமை அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேத நிலைய வீட்டை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக அரசாணையை கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வேத நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த அமர்வில் உள்ள ஒரு நீதிபதி ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனவே இந்த வழக்கை தொடர்ந்து இந்த அமர்வு விசாரிக்க வில்லை
வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.