/indian-express-tamil/media/media_files/2025/02/26/RJXtLOjjpmEm6MWNwEKE.jpg)
சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய நடிகையின் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு காவல்துறையினர் அனுப்பிய சம்மன் அடிப்படையில் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தப்பட்ட நடிகை குறித்து சீமான் பேசிய கருத்துகளுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில அதிர்ச்சிகர தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "பாதிக்கப்பட்ட நடிகை எனக்கு போன் செய்து பேசினார். தான் முன்பு பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். நடிகைக்கு ஆதரவாக நாங்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். மேலும் அவர் என்னிடத்தில் பேசும் போது கூறிய சில விஷயங்கள் என்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளன.
சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கர்ப்பப்பையை நீக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்" என்று நடிகை தெரிவித்ததாக வீரலட்சுமி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. சீமான் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.