விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் உள்ள பஞ்சமாதேவி என்ற இடத்தில், வீராணம் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயிலிருந்து சுமார் 50 அடி தூரத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.
குழாயிலிருந்து வெளியேறும் இந்த நீர், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நீரில் மூழ்கடித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உடனடியாக இந்த உடைப்பை சரிசெய்யும் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி - பாபு ராஜேந்திரன்