வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து, லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை மே 7ம் தேதி வரை வெளியேற்றக் கூடாது என வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், அங்குள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் மிக அவசியம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
தற்போது கொரோனா ஊரடங்கால் சி.எம்.சி., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சுமார் 10 ஆயிரம் பேர், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
லாட்ஜ்களில் தங்கியுள்ள இவர்கள் செலுத்த வேண்டிய மாத வாடகையில், 50 சதவீதத்தை தங்கியிருப்பவர்களும், 25 சதவீத்தை அரசும், எஞ்சிய 25 சதவீதத்தை லாட்ஜ் உரிமையாளர்களும் ஏற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், சிகிச்சைக்கு வந்த வெளிமாநிலத்தவர்களை காலி செய்யக் கூறி உரிமையாளர்கள் வற்புறுத்தி வருவதால், ஏற்கனவே அறிவித்தபடி, லாட்ஜ் வாடகை மற்றும் உணவு செலவை அரசு ஏற்க உத்தரவிட வேண்டும் எனவும், லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை காலி செய்ய தடை விதிக்கக் கோரியும் கருணா மிரியம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா - சென்னையில் மட்டும் 176 பேருக்கு தொற்று
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத்தையும் எதிர்மனுதாராக சேர்க்க உத்தரவிட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மே 7ம் தேதி வரை சிகிச்சைக்காக வந்து லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றக்கூடாது எனவும் வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.