Advertisment

வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விரைவில் 9 இருக்கை விமானப் போக்குவரத்து

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வேலூரில் இருந்து சென்னை, பெங்களுருக்கு 9 இருக்கைகள் கொண்ட விமானம் விரைவில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
aircraft

சிறிய ரக விமானம் (கோப்பு படம்)

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வேலூரில் இருந்து சென்னை, பெங்களுருக்கு 9 இருக்கைகள் கொண்ட விமானம் விரைவில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானம் மூலம் செல்ல முடியும். வேலூர் விமான நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், உரிமம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர் விமான நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்து உரிமம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான இயக்கும் நிறுவனமான ஏர் டாக்ஸி, விரைவில் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்குச் விமானப் போக்குவரத்து செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS) உடான் (UDAN) திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட வேலூர் விமான நிலையத்தில் 800மீ ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் விமான நிலையப் பணிகள் முடிந்து உரிமம் பெறுவதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் விரைவில் அந்த இடத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானம் மூலம் செல்ல முடியும். வேலூர் விமான நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், உரிமம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம். சண்முகத்தின் கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். 

உடான் திட்டத்தின் கீழ் வேலூர் (அப்துல்லாபுரம்) விமான நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தி.மு.க எம்.பி எம். சண்முகம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “வேலூர் விமான நிலையத்தின் வளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி நடந்து வருகிறது. அது தயாரான பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்லைன் ஆபரேட்டரான ஏர் டாக்ஸி, 9 இருக்கைகள் கொண்ட விமானம் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம்” என்று கூறினார்.

வேலூரில் இருந்து விமானம் இயக்கப்பட்டால், வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு விரைவாக விமானம் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Vellore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment