/indian-express-tamil/media/media_files/2024/11/08/9H4GAL8Wjr7PHcZs0thM.jpg)
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்கள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்
/indian-express-tamil/media/media_files/2024/11/08/yyx06AHAkSUDvFW99apn.jpg)
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது. | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/OyWF3pnsd2sV6mZwUZoq.jpg)
இந்த அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட, 2600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/UD5VdTLbcrVb5q7Dld84.jpg)
இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/pM1rODM7a4rLhaEwKDQR.jpg)
இந்தக் கற்கள் அந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடவும், கற்கருவிகள் தயாரிக்கவும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறினார். | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/i485TCBrmimDWeD9oAEp.jpg)
மேலும், ''இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றும் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறினார். | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.