Advertisment

பிளாஸ்டிக்-ஐ தவிர்க்க மெரினா வணிகர்கள் முயற்சி: குவியும் பாராட்டு

சென்னை கடற்கரைகளில் விற்பனையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களைப் தவிர்ப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பிளாஸ்டிக்-ஐ தவிர்க்க மெரினா வணிகர்கள் முயற்சி: குவியும் பாராட்டு

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் விற்பனையாளர்கள் மண் பாண்டங்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்துவதாகவும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களைப் தவிர்ப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Advertisment

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கோப்பைகளை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் சென்னைவாசிகள் பங்கேற்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

publive-image

"பொதுமக்கள் கடற்கரையில் பானங்கள் அருந்த விரும்பினால் குல்ஹாட்களின் மூலம் அருந்தலாம் என்று வணிகர்கள் கூறுகிறார்கள். பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி எடுக்கின்ற முயற்சிக்கு வணிகர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்" என்று ஜி.சி.சி. தரப்பில் கூறப்படுகிறது.

நவம்பர் 2 முதல் நவம்பர் 15 வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக சென்னையில் உள்ள 4,808 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி ரூ.12,55,700 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சென்னை கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லாத இடங்களாக மாற்றும் முயற்சியைத் முயற்சித்தனர். சென்னை மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு, குடிமைப் பிரிவினர், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தடுக்க, சோதனை நடத்தினர்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்து வருகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்களில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதுடன், கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.  இதனை தடுக்க வணிகர்கள் மூலம் இந்த புதிய முயற்சியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Marina Beach Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment