Advertisment

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: நீதி கிடைக்காததால் தேர்தலை புறகணிக்க வேங்கைவயல் மக்கள் பதாகை

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் மக்கள் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vengaivayal

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் மக்கள் பதாகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் மக்கள் ஃபிளக்ஸ் பேனர் பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கண்டறியப்பட்டது.

சக மனிதர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட இழிவான சம்பவம் நடந்து 15 மாதங்கள் கடந்த நிலையில், காவல்துறை இதுவரையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது  செய்யாததால், இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் மக்கள் 2 இடங்களில் ஃபிளக்ஸ் பேனர் பதாகைகளை வைத்துள்ளனர்.

LS boycott Vengaivayal

அந்த பேனரில் “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால், வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, வேங்கைவயல் கிராமத்தில் அனுமதி இன்றி பதாகை வைத்துள்ளதால், காவல்துறையினர் வேங்கை வயல் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பகுதியில் அமைந்திருந்த, குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vengaivayal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment