Advertisment

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து: இமாச்சலில் சைதை துரைசாமி மகன் மாயம்

இமாசலுக்கு சுற்றுலா சென்ற போது சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார், நிலைதடுமாறி சாலையோரம் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் ஆற்றில் விழுந்து கவிழ்ந்துளளது.

author-image
WebDesk
New Update
Vetri Duraisamy Went Missing After Car Crashed Satlaj River Himachal Pradesh Tamil News

காரில் பயணித்த மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியை தேடி வருவதாக இமாச்சல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai: சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Advertisment

இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் அவர்கள் பயணித்த கார் சென்றுள்ளது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் டிரைவர்  உயிரிழந்தார். காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெற்றி துரைசாமி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். வெற்றி துரைசாமி புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment