இமாச்சல பிரதேசத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடும் 4வது நாள் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்த வெற்றி துரைசாமியின் கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் நிலை இன்னும் அறிப்படாமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்தோ திபெத்திய படை, ராணுவம் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் 4வது நாளாக அவரை தேடும் பணி இன்று நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை மீட்பு பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரை ட்ரோன் மூலம் தேடும் பணி தீரவமாக தொடர்ந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“