Advertisment

வைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு... பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..

பாம்புகளைக் காப்பது நம் கடமை... பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என முகநூலில் உருக்கம் !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாஜக மாநில துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ்

பாஜக மாநில துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ்

பாஜக மாநில துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தன்னுடைய வீட்டின் வேலி அருகே மாட்டிக் கொண்ட பாம்பு ஒன்றினை உயிருடன் பத்திரமாக மீட்டிருக்கிறார். கோவை மாவட்டத்தில் வசித்து அவருக்கு, கோவை காளப்பட்டியில் இருக்கும் நேரு நகரில் தோட்டம் ஒன்று உள்ளது.

Advertisment

அந்த தோட்டத்தில் செடிகளுக்கு பாதுகாப்பாக போடப்பட்டிருந்த வலை ஒன்றில் ஆறடி நீளமுள்ள பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது.

பாம்பினை காப்பாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ்

அதனை பார்த்த நாகராஜ், அந்த வலையினை அறுத்து, அந்த விச பாம்பினை காப்பாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் “பாம்புகள் விவசாயிகளின் நண்பன். விவசாயிகளுக்கு பெரிய அளவு பிரச்சனையாக இருக்கும் எலிகளை பிடித்து விழுங்கிவிடும். தேங்காய் குரும்பைகளை கடித்தெறியும் எலிகளை விரட்டிப் பிடித்து உண்டு விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தில் இருந்து விவசாயிகளை காக்கும் பாம்புகளை கொல்லக் கூடாது. பாம்புகளை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே பதிவு செய்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : ஹோட்டல் மீட்டிங்கில் திடீரென விழுந்த பாம்பு... கதறிக் கொண்டு ஓடிய அலுவலர்கள்

Bjp Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment