/indian-express-tamil/media/media_files/2025/09/08/mps-covai-2025-09-08-15-21-59.jpg)
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த கோவை எம்.பி க்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த கோவை எம்.பி க்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ராஜ்குமார், “துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்கு செலுத்துவதற்காக, எம்.பி.க்கள் எல்லாம் இன்று டெல்லி புறப்படுகிறோம். தேர்தல் எப்படி நடைபெறப் போகிறது? எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு நாங்கள் எல்லாம் நாளை வாக்கு செலுத்தி விட்டு வருவோம் என்று கூறினார்.
தமிழரான ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நிச்சயமாக இண்டி கூட்டணிக்கு தான் வாக்கு செலுத்த முடியும். தமிழர் என்பதால் அவருக்கு வாக்கு செலுத்த முடியாது.
பாரதிய ஜனதா தமிழருக்கு இந்த அலங்கார பதவி கொடுத்ததற்காக, தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் கொடுக்காமல் ஒரு பதவி கொடுத்ததற்காக அவருக்கு வாக்களிக்க முடியுமா? வாழ்த்துக்கள். அவர்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், என்ன இருந்தாலும் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். ஆனால், தமிழர்களுக்கு அவரால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று கூறினார்.
அதிகமான எம்.பி க்கள் பா.ஜ.க-வின்ன் பக்கம் இருக்கிறார்களே என்ற கேள்விக்கு, “ஆம் மெஜாரிட்டி அவர்கள் பக்கம் இருக்கிறது. ஆனால், இங்கு போட்டி இருக்கிறது. அவர்கள் பக்கம் இருக்கும் வாக்குகள் எங்கள் பக்கம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் இருக்கிறார் அதற்காக சந்திரபாபு நாயுடு சப்போர்ட் செய்வாரா? ஒவ்வொரு கட்சியை சேர்ந்த சேர்ந்த தலைவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை பொறுத்து நாங்கள் செயல்படுவோம் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.