Pollachi Tamil News: மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை, சின்ன கல்லார், சக்தி எஸ்டேட் , தல நார் எஸ்டேட் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆனைமலை புலிகள் காப்பகம், அப்பர் நீரர், கவி அருவி, நவமலை ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நவமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைமட்ட பாலம் மூழ்கியுள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil