பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
Coimbatore News in Tamil | கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்களான WHCT அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மலைப்பாம்மை லாவகமாக பிடித்து மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.
#WATCH || வீடியோ: தென்னந் தோப்பில் புகுந்த மலைப் பாம்பு; கோவை வனத் துறையிடம் ஒப்படைப்புhttps://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #snake pic.twitter.com/n410nnkNlT
— Indian Express Tamil (@IeTamil) November 26, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil