Advertisment

'மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்': மீண்டும் மன்னிப்பு கேட்டு மருத்துவத் துறைக்கு இர்ஃபான் கடிதம்

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத் துறையிடம் யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
irfan

பிரபல யூடியூபர் இர்பான்- மனைவி ஆஃசிபாவுக்கு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது மருத்துவமனை பிரசவ அறையில் இருந்த இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி உள்ளார். 

Advertisment

மருத்துவர் ஒருவர் கத்தரிக்கோல் கொடுக்க அவர் இதை செய்தார். இதை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்து தனது  யூடியூப் பக்கத்தில் கடந்த 19-ந் தேதி இர்பான் வெளியிட்டார். 

இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே போல் பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க கோரி, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள்
புகார் அளித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் கடிதத்தில் விளக்கம் கூறியுள்ளார். மேலும் இர்ஃபான் இப்போது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் இந்த கடிதத்தை  சமர்ப்பித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment