Advertisment

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை: விஜிலன்ஸ் எஃப்.ஐ.ஆர் முழு விவரம்

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
Jan 20, 2022 08:04 IST
New Update
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை: விஜிலன்ஸ் எஃப்.ஐ.ஆர் முழு விவரம்

அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு, அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

publive-image

லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரின்படி, கே.பி அன்பழகன் பதவி வகித்த காலத்தில், அதாவது 27.4.2016 முதல் 15.3.2021 வரை, அவர் சேமித்த மொத்த வருமானம் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரம் மொத்தமாக 10 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 663 ரூபாய் ஆகும். ஆனால், அவரது சொத்து மதிப்பு மொத்த வருமானத்தை விட ரூ.11,32,95,755 அதிகமாக இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் என 5 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Raid #Minister Kp Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment