New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/18/wrCZJ7b73QC1Tw0NNu2V.jpg)
பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி
பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து சுமார் ஓராண்டுக்கு மேலாக போராடி வரும் மக்களை நேரில் சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டு அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக, காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கு, பரந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 20 ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக பொதுமக்களை சந்திப்பதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த ஏற்பாடுகளை தமிழ் வெற்றிகழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.