பாதிக்கப்பட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு: புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என த.வெ.க வேண்டுகோள்

கரூர் உயிரிழப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்த புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என த.வெ.க சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் உயிரிழப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்த புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என த.வெ.க சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
vijay

கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால், காவல்துறை அனுமதி அளிக்காததால் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். நேற்று அதிகாலை முதலே கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்கள் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஐந்து சொகுசு பேருந்துகளில் அவர்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று த.வெ.க தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள  பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தைச் சேர்ந்த 235 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒவ்வொருவரையும் தனித்தனி அறையில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது த.வெ.க நிர்வாகிகள் விஜய் உடன் இல்லை என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி ஆகியவற்றின் செலவுகளை ஏற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வழிவகை செய்வதாக உறுதியளித்துள்ளார்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்த புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று த.வெ.க சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சமூக வலைதளப் பதிவில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனான தலைவர் விஜய்யின் சந்திப்பு ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால், ஊடக நண்பர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TVK Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: