/indian-express-tamil/media/media_files/2025/09/18/vijay-high-court-2025-09-18-14-57-09.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் பரப்புரைகளுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கில், காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், இனிவரும் காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பொருந்தும் என்பது உறுதியாகியுள்ளது.
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி தவெகவினர் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பல்வேறு இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட வேண்டும் எனவும் ஐகோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விஜய் தனது பரப்புரை பயணங்களை மேற்கொண்டபோது, சில இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது என்பது நியாயமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிமுறைகளை வகுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இனிவரும் காலங்களில், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பாரபட்சமின்றி, ஒரே மாதிரியான விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
பரப்புரைகளின் போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதிப்பதற்கான விதிமுறைகளை வகுக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் மற்றும் வாகனப் பேரணிகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவதில் தெளிவான, உறுதியான விதிமுறைகள் இல்லாததே இதுபோன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி த.வெ.க தொடர்ந்த வழக்கில் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜயின் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி தவெக தொடர்ந்த வழக்கில், ‘நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை, பிற கட்சிகளுக்கு இல்லாத விதிகளை காவல்துறையினர் விதிக்கின்றனர்' என்ற தவெக தரப்பு வாதம் ஏற்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சித் தலைவர் ஒழுங்குப்படுத்த வேண்டாமா?- என்றெல்லாம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us