அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்ருக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் ரூ. 206 கோடியே 42 லட்சம் வரி பாக்கி செலுத்தாதது தெரியவந்தது. இந்த வரி பாக்கியை வசூலிக்கும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களையும், 3 வங்கி கணக்குளையும் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதை எதிர்த்து சி. விஜயபாஸ்கர் தாக்கல் செய்ய மனுவில், "2011-12 முதல் 2018-19 ஆண்டு வரையிலான கணக்கீட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அவசர கதியில் வரி மதிப்பீடு செய்ததாக வருமான வரி செட்டில்மெண்ட் ஆணையத்தை அணுகினோம். அப்போது எனது கோரிக்கை 2020 ஜனவரி 9-ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 20-ம் தேதி எனக்கு சொந்தமான 48 சர்வே எண்களில் உள்ள 117.46 ஏக்கர் நிலம் மற்றும் எம்.எல்.ஏ சம்பளம் பெறும் வங்கி கணக்கு உள்ளிட்ட 4 வங்கி கணக்குகளை வரிமான வரித்துறையால் முடக்கப்பட்டது.
எம்.எல்.ஏ சம்பளம் மட்டுமல்லாமல், விவசாயம், கல் உடைக்கும் ராசி புளூ மெட்டல் நிறுவனம், நிலங்களில் குத்தகை ஆகியவற்றின் மூலம் எனக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் சொத்துக்கள் முடக்கியதால் உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை. மேலும் வங்கி கணக்குகள் மூலம் எம்.எல்.ஏவுக்கான சம்பளம், அரசு நிதி பெறுவதால் அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், விஜய பாஸ்கரின் மனு குறித்து வருமான வரித்துறை நாளை மறுநாள் (டிசம்பர் 1) பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamilஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்தது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.