Advertisment

விஜயகாந்த் மீண்டு(ம்) வர வேண்டும்; தலைவர்கள் விருப்பம்... தே.மு.தி.க-வினர் சிறப்பு வழிபாடு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டு(ம்) வர வேண்டும் என்று அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க தொண்டர்கள் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Vijayakanth 1

விஜயகாந்த் மீண்டு(ம்) வர வேண்டும்; தலைவர்கள், பிரபலங்கள் பதிவு... தே.மு.தி.க-வினர் சிறப்பு வழிபாடு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்ட நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டு(ம்) வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தே.மு.தி.க தொண்டர்கள் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Advertisment
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாகம், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று அறிக்கை வெளியிட்டது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் பூரண உடல் நலம்பெற்று மீண்டு(ம்) வர வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்று விரும்புவதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:  “உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“விஜயகாந்த் சார் வெகுவிரைவில் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன்” என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலம் சீராக இல்லை என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் தொடர் சிக்கிச்சை தேவைப்படுகிறது” என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியானதும் தே.மு.தி.க தொண்டர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். 
இந்நிலையில், விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டும் என தே.மு.தி.க தொண்டர்கள் திருக்கோவிலூர் அருகே வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
DMDK cadres prayer
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வெக்காளி அம்மன் கோயிலில் தே.மு.தி.க-வினர், விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment