தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/40419ce0-3bc.jpg)
இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவாது உடல் நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் “ விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கும் இன்னும் 14 நாட்கள் தொடர் சிக்கிச்சை தேவைப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“