"சிறுமியின் படத்தை மதுபாட்டிலில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்" - விஜயகாந்த்

தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
vijayakanth

தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “வேலூர், சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா,தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமி விஷ்ணுபிரியாவின் படத்தை மதுபாட்டில்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மதுபாட்டிலில் ஒட்டப்படும் சிறுமியின் புகைப்படத்தை பாா்த்தாவது ஒவ்வொரு தந்தையும் குடிபழக்கத்தை கைவிட வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும்.” என விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Vijayakanth Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: