Advertisment

விஜயகாந்த் மகன் சொன்ன அந்த வார்த்தை: கண்கலங்க வைக்கும் சமூகவலைதள பதிவு

தே. மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு, அவர் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு, அதிக கவனத்தை பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தே. மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு, அவர் மகன்  சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு, அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Advertisment

விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வந்தனர்.

மேலும் விஜயகாந்த் தொடர்பான கட்டுரைகள், புகழ்ச்சி பதிவுகள் அதிகமாக சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

’இரங்கல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். லட்சக்கணக்கானோர் எனது  தந்தையின் இறுதி ஊர்வலத்தில்  கலந்து கொண்டனர். என்ன மாதிரியான அன்பை எனது தந்தை இங்கே விட்டுச் சென்றுள்ளார் என்பதை இது காட்டுகிறது.

அப்பா என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தார், எதை சமபாதித்தார் என்பதை இந்த இறுதி ஊர்வலம் வெளிப்படுத்துகிறது. பேரிழப்பை நாங்கள் எதிர்கொண்டுள்ள  சுழலில், உங்க; அனைவரும் ஆதரவு எங்களுக்கு அறுதலாக உள்ளது”  என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment