கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ரூ.20 லட்சம் வழங்கிய த.வெ.க

கரூர் த.வெ.க. கூட்டநெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 குடும்பத்தினருக்கு த.வெ.க சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா ரூ 20 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தி வரவு வைக்கப்பட்டது.

கரூர் த.வெ.க. கூட்டநெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 குடும்பத்தினருக்கு த.வெ.க சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா ரூ 20 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தி வரவு வைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Vijay visit karur

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ரூ.20 லட்சம் வழங்கிய த.வெ.க

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 அன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரில், 39 குடும்பத்தினருக்கு அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை (RTGS) மூலம் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் 39 குடும்பத்தினருக்காக மொத்தம் ரூ. 7.8 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 20 நாட்கள் கழித்து, 39 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் வீடியோ கால் மூலம் அவர்களுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரில், பிரித்திக் மற்றும் சந்திரா ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இவர்களது நிவாரணம் தொடர்பான மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று த.வெ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்த விஜய்யைப் பார்க்க மக்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நிவாரண அறிவிப்புகள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விஜய்க்கு சாதகமாக வந்த நிலையில், அவர் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து காசோலையை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது நிவாரணம் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. விமர்சனம் எழுவதற்கு முக்கிய காரணம், நிவாரணம் என்பது உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில், இந்த உதவி 20 நாட்கள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.

Vijay TVK Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: