விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 3ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று ( செப்டம்பர் 30ம் தேதி) முடிவடைந்த நிலையில், இன்று ( அக்டோபர் 1ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இதேபோல, விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 15 மனுக்கள் ஏற்பு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. என தேர்தல் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் 46 மனுக்களில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டது; 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 3ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.