/indian-express-tamil/media/media_files/nqFtW097KGKcWjqYO2aM.jpg)
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு.
Vikravandi: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க-வின் புகழேந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, 8 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே, எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.