விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப் பதிவின்போது கை விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வழக்கம்போல் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும்.
இருப்பினும் மக்களவை தேர்தலில் வாக்களித்த போது வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் இடது கை நடு விரலில் மை வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“