கருப்புக் கொடியுடன் போராட்டம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 265வது நாளாக திரண்ட மக்கள்

புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
parandhur protest

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், விவசாயிகளும் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கட்ட முன்மொழியப்பட்டதைக் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனை எதிர்த்து போராடி வரும் மக்கள், 265வது நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் மொட்டையடித்துக்கொண்டு தெருவில் இறங்கினர்.

சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசு அறிவித்துள்ளன.

புதிய விமான நிலையத்திற்காக நீர்நிலைகள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த புதிய விமான நிலையத்தால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் தங்கள் எதிர்ப்பை ஒரு தனித்துவமான வழியில் வெளிப்படுத்த கறுப்புக்கொடி ஏந்தியவாறு வீதிகளில் திரண்டு விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Airport Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: